திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவிற்கு ஆடு, கோழிகளை எடுத்து செல்ல தடை
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்து நடைபெறப் போவதாக பள்ளிவாசல் சார்பாக தகவல் வெளியான நிலையில் திருப்பரங்குன்றம் மலையடிவாரம் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலை மீது உள்ள தர்கா பள்ளிவாசலுக்கு வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதி கந்தூரி நடத்துவதற்கு ஆடு கோழிகளை எடுத்துச் செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவிப்பு.