ஆக.19 - திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் - மீனவர் சங்கம் அறிவிப்பு
வரும் 19ஆம் தேதி மீனவர்களை திரட்டி, திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.