குலைநடுக்க பயத்தில் போலீஸ் ஸ்டேஷன் பறந்து வந்த பாடகர் SPB மகன்

Update: 2025-09-07 02:54 GMT

வாடகை கேட்டால் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - SPB சரண் குமுறல்

உதவி இயக்குநர் கொலை மிரட்டல் விடுப்பதாக பாடகர் எஸ்.பி. சரண் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் மகனும், பிரபல பாடகருமான எஸ்பி சரண், சென்னை சாலிகிராமம் சத்யா நகரில் உள்ள தனது வீட்டை, 2017ஆம் ஆண்டு சினிமா உதவி இயக்குனர் திருஞானம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ், மாத வாடகை 35,000 ரூபாய் என பேசி வீட்டை வாடகைக்கு விட்ட நிலையில், கடந்த 23 மாதங்களாக திருஞானம் வாடகை கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. தான் வாடகை பணத்தை கேட்டபோது, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கேகே நகர் காவல் நிலையத்தில் சரண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சரணிடம் விளக்கம் பெற முயன்றபோது, அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்