பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக கூறினார்.