பெண்கள் முறத்தால் அடிவாங்கி கொள்ளும் விநோத திருவிழா
வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியில் பெண்கள் முறத்தால் அடிவாங்கி கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது. காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால் பெண்களுக்கு குழப்பமான எதிர்மறை எண்ணங்கள் விலகும் என நம்பப்படுகிறது. திருமணம், குழந்தை பேறு வேண்டி வரும் பெண்களும் இதில் பங்கேற்று முறத்தால் அடி வாங்கி கொண்டனர். பொங்கல் நாளையொட்டி இந்த விநோத திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.