வீடுகளை சூழ்ந்த மழவெள்ளம் - பொதுமக்கள் அவதி
சிதம்பரத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சிதம்பரத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், சிதம்பரம் நகராட்சியின் இந்திரா நகரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர் 3 நாட்களை கடந்தும் வடியவில்லை. இதனால் அவதியடைந்துள்ள பொதுமக்கள், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.