Pattukkottai | நள்ளிரவில் ஹாஸ்பிடலில் புகுந்து மர்ம நபர் செய்த கொடூர செயல் - அலறி ஓடிய செவிலியர்கள்
மருத்துவமனையை அடித்து உடைத்து செவிலியர்களை தாக்க முயற்சி
பட்டுக்கோட்டையில் நள்ளிரவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைந்து செவிலியர்களை தாக்க முயன்ற, இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த நபர், மருத்துவமனையில் உள்ள கண்ணாடி கதவுகள் மற்றும் பொருட்களை உடைத்து செவிலியர்களை தாக்க முயன்றுள்ளார். சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் செவிலியர்கள் கூச்சலிட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் தகராறில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்ட அருண் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.