இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து சிவகங்கையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், சிறு சிறு பிரச்சினைகளை ஏற்படுத்தி இஸ்லாமிய மக்களை மிரட்டி பணிய வைக்க பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.