இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பின் பேச்சு மாறிய கயவன் - விழுப்புரத்தில் பரபரப்பு புகார்
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர். அம்மாவாசைப்பாளை கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாவை, ஆசை வார்த்தை கூறி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கர்ப்பமாக்கியுள்ளார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.