அகழாய்வில் இரும்பினாலான உடைந்த கத்தி கண்டெடுப்பு | Cuddlore | Excavation

Update: 2025-01-30 02:33 GMT

கடலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் பழங்கால மக்கள் பயன்படுத்திய இரும்பினாலான உடைந்த கத்தி கண்டெடுக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்துள்ள மருங்கூர் நடைபெற்று வரும் அகழாய்வில், இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மேற்கொண்ட அகழாய்வில், இராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள் உள்ளிட்டவை கிடைத்த நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்