சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் - தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு, தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.