நீதிமன்ற உத்தரவு எதிரொலி.. 25 அடி உயர பிரமாண்ட ADMK கல்வெட்டு இடிப்பு
25அடி உயர பிரம்மாண்ட அதிமுக கல்வெட்டு இடித்து அகற்றம்
காஞ்சிபுரம் கீழ்கேட் பகுதியில் இருந்த 25அடி உயரமுடைய பிரம்மாண்ட அதிமுக கல்வெட்டை நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் பாதுகாப்புடன் வருவாய்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கல்வெட்டுகள்,கொடிகம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.