பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவாக பேசி வருவதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார் அளித்துள்ளது. திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கத்தினர் ஏன் குரல் கொடுக்கவில்லை எனக் கூறி, அவர்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை சீமான் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து காவல் நிலையங்களில் புகார் அளித்து வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பினர், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.