வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆம்புலன்சில் வந்து மருத்துவ உதவி கேட்ட நபரிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார். குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தை சேர்ந்த மோகன், தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றியபோது ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு, படுத்தப் படுக்கையாக உள்ளார். இந்நிலையில், அரசு மருத்துவ நிவாரண உதவி அளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.