Kanchipuram | வயிறு வலின்னு சொன்ன பெண்ணை காட்டிற்குள் கூட்டி சென்று பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு இளைஞர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையை சேர்ந்த 24 வயது இளம்பெண்,
ஒரகடம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வயிற்று வலி ஏற்படவே, அருகில் வசித்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் இளம்பெண்ணை, அடர்ந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.