"கபடி வீரர்களுக்கு இதுதான் முக்கியம்.."- கண்ணகி நகர் கார்த்திகா கருத்து
கபடி வீரர்களுக்கு இலக்கும், ஒழுக்கம்தான் முக்கியம் என்றும், அது இருந்தால் பலரும் உதவி செய்வார்கள் என்றும் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா தெரிவித்தார். மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில், காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் 8 கபடி வீரர்களை சந்தித்த கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகா, தமிழ்நாட்டிற்காக 11 முறை விளையாடி எட்டு முறை பதக்கங்கள் வென்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.