இந்தியாவிற்கு அரசு முறை பயணம் வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேய்க் ஹம்தான் Sheikh Hamdan இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது ஐசிசி தலைவர் ஜெய்ஷாவும் உடனிருந்தார். துபாய் பட்டத்து இளவரசருக்கு கேப்டன் ரோகித் சர்மா, துபாய் என பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை பரிசளித்து மகிழ்ந்தார்.