இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-க்கு 2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது.
3வது டெஸ்டில் காயம் ஏற்பட்டிருந்தாலும், ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று இந்திய அணியின்அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். மேலும் ஆகாஷ் தீப் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், அன்சுல் காம்போஜ் போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.