மாமூல் கேட்டு மிரட்டிய கவுன்சிலர் மகன்...பாய்ந்த அதிரடி ஆக்சன்

Update: 2025-02-21 08:36 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், அரசால் அனுமதி பெற்ற பார் நடத்தி வருகிறார். ராசிபுரம் 24-வது வார்டு உறுப்பினராக உள்ள கலைமணியின் மகன் லோகசரவணன், பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், லோக சரவணன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்