உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளாவுக்கு மத்தியில், கிரீஸ் நாட்டு பெண்ணை இந்தியர் திருமணம் செய்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது. கிரீஸ் நாட்டை சேர்ந்த பெனிலோப் (Penelope) என்பவரை, இந்தியரான சித்தார்த் என்பவர் காதலித்து வந்த நிலையில்,
பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்து, மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் பொருத்தமாக இருக்கும் என கருதினர். வைதீக முறைப்படி உரிய சடங்குகளுடன் நடைபெற்ற திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.