சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி

Update: 2025-12-23 06:46 GMT

மண்டல பூஜையையொட்டி, ஆறன்முளா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலமாக புறப்பட்டது. மண்டல பூஜை வரும் 27-ஆம் தேதி காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 26-ஆம் தேதி மாலையில் சபரிமலையை தங்க அங்கி ஊா்வலம் வந்தடையும். பின்னர், சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும். திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தங்க அங்கி, சுமாா் 420 பவுன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்