நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அன்புமணி ராமதாஸ் இனிவரும் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று தெரிவித்தார். தான் மருத்துவராக இருந்தாலும் யாருக்கும் கசப்பு மருந்து கொடுப்பதில்லை என்றும் ராமதாஸ் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.