நிதி ஆயோக் கூட்டம்-முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்

Update: 2025-05-25 02:48 GMT

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் 2024-2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும் என்றும்,

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை எனவும்,

எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்...

அத்துடன் இந்தத் திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் எனவும், அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்..

பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A நிதி மறுக்கப்பட்டுள்ளது என்றும்,

குறிப்பாக, 2024-2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்...

எனவே, தாமதமின்றி, ஒருதலைபட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்...

கடந்த 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு வரி வருவாய் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தப்பட்ட நிலையில்,

33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்,

மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துவதாகவும்,

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்