Bengaluru | மெய்மறக்க கூத்தடித்த 35 இளம்பெண்கள் உட்பட 115 பேர் கைது - பெங்களூரு போலீஸ் அதிரடி
ரிசாட்டில் போதை விருந்து - 35 இளம்பெண்கள் உடப்ட 115 பேர் கைது
பெங்களூரு அருகே ராம்நகர் மாவட்ட ரிசார்ட்டில் நடந்த போதை விருந்தில் 35 இளம்பெண்கள் உட்பட 115 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் விருந்து நடைபெற்றது. ரகசிய தகவலின் பேரில் ககலிபுரா போலீசார் சோதனை நடத்தி போதைப்பொருட்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 115 பேரில் பலர் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் என்பது தெரியவந்தது.