பலியாகும் குழந்தைகள்..."இந்திய மருந்தை பயன்படுத்தாதீர்கள்" - எச்சரிக்கை விடுத்த WHO

Update: 2023-01-12 07:28 GMT

உஸ்பெஸ்கிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, நொய்டாவில் நிறுவனங்கள் தயாரிக்கும் இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

நொய்டாவில் உள்ள மரியான் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த இரண்டு இருமல் மருந்துகளை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதன் காரணமாக இருமல் மருந்துகளின் தரம் குறித்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வில் மருந்தின் தரம் தோல்வியை தழுவியதால், அதை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்