“உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...“ - உயிரை விடும் முன் மனைவிக்கு வீடியோ - உடலை பார்த்து கதறிய மனைவி

Update: 2023-07-04 04:16 GMT

சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர், வீடியோ பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வந்தவர் பெருமாள். பெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பெருமாள் குடியால் தனது மனைவியை தான் சங்கடப்படுத்திவிட்டதாக வீடியோவில் பதிவு செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்