தென்னிந்தியாவை மிரட்டிய புறா.. 18 நாட்களில் புதிய சாதனை

Update: 2023-05-14 08:06 GMT

புதுக்கோட்டை அருகே ஆயிரத்து 700 கிலோமீட்டர் தூரத்தை, 18 நாள்களில் கடந்து பந்தய புறா சாதனை படைத்துள்ளது. ரெத்தின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் வளர்த்து வரும் புறா, கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்டது. இந்நிலையில், இந்த புறா ஆயிரத்து 700 கிலோமீட்டர் தூரத்தை 18 நாள்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், தென்னிந்திய அளவில் இப்புறா நான்காம் இடத்தையும், டெல்டா மாவட்டத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்