போலீசுக்கு போக்கு காட்டியவரை.. தட்டி தூக்கிய காவல்துறை...!

Update: 2023-01-05 17:26 GMT

சென்னையில் தீண்டாமை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது, சூரிய மூர்த்தி என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்யும் போது அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில், 2018 ஆம் ஆண்டு தீண்டாமை கொடுமை வழக்கில் சூரிய மூர்த்தி சிறை சென்றுள்ளார்.

போலீசுக்கு போக்கு காட்டியவரை.. தட்டி தூக்கிய காவல்துறை...!இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சூரியமூர்த்தி, அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜராகமால் தலைமறைவாக இருந்தது தெரியவர, சூரியமூர்த்தியை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்