சிவகங்கை அருகே பாரம்பரிய பாரிவேட்டை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய ஆண்களுக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
சிவகங்கை அருகேயுள்ள காட்டாம்பூர் கிராம மக்கள், சிவராத்திரியிரியிலிருந்து 4 நாட்களுக்கு பின்னர் வேல், கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் பாரிவேட்டைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இந்தாண்டும் பாரி வேட்டை நடைபெற்றது. பின்னர் ஆடுகளை வெட்டி இறைச்சியை பகிர்ந்துகொண்ட ஆண்கள், அதனை வேட்டையாடியது போல் கொண்டு சென்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.