RSS பேரணியில் மாவட்ட பாஜக தலைவருக்கு சினிமா பாணியில் நடக்கவிருந்த பயங்கரம்.. சென்னை கூலிப்படையின் பகீர் சம்பவம்

Update: 2023-04-17 02:33 GMT

ராமநாதபுர மாவட்ட பாஜக தலைவரை சென்னை கூலிப்படையை சேர்ந்தவர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் பேரணி நடபெற்றபோது, மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசனை இருவர் நோட்டமிட்டு வந்துள்ளனர். இதை கண்டு சந்தேகமடைந்த தரணி முருகேசனின் ஆதரவாளர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பயங்கர ஆயுதங்களை கொண்டு இருவரும் அவர்களை தாக்க முயன்று விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் பிடித்து தரணி முருகேசனின் ஆதரவாளர்கள் போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் சென்னை எண்ணூர் பகுதியின் கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மோகன் என்பதும் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாஜக தலைவரின் தூண்டுதலில் தாக்க முயன்றதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்