ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. - அச்சத்தில் ஊர் மக்கள் | Fire

Update: 2023-06-10 14:12 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பால்கர் மாவட்டம் வாடா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்