கல்லூரியில் குட்கா பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியர் - விரக்தியில் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவன்... கரூர் அருகே அதிர்ச்சி

Update: 2022-12-17 03:09 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 18 வயதான மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கல்லூரி வளாகத்தில் குட்கா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கல்லூரி பேராசிரியர்கள் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த அவர் கல்லூரியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்