எஸ்பி அலுவலக வளாகத்திலேயே கஞ்சா விற்பனை..ஈரோட்டில் பரபரப்பு

Update: 2023-05-11 12:24 GMT

தமிழகத்தில் ஆபரேசன் 2.O என்ற பெயரில், கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது. எனினும், ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பு சோதனை பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில், கஞ்சா விற்பனை குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், எஸ்பி அலுவலக வளாகத்தில் போலீசார் இன்று திடீரென சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் சந்தோஷ்ராஜ் மற்றும் சண்முகம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு எஸ்பி அலுவலக வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து போலீசார் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்