"ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்பு" - சிபிசிஐடி தகவல்

Update: 2022-09-26 16:41 GMT

ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்பு" - சிபிசிஐடி தகவல்

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர், கட்சி தொடர்புடைய முக்கிய ஆவணங்களை திருடிச்சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மீட்கப்பட்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக தலைமை அலுவலக பத்திரம், முன்னாள் முதலமைச்சர் ஜானகி எழுதி கொடுத்த ஆவணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவுக்கு உள்ள சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட 113 ஆவணங்களை சிபிசிஐடி கைப்பற்றியுள்ளது. மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும், நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்