"கிரிவலப் பாதையில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது"... "மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

Update: 2022-09-10 05:24 GMT

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்தார். கிரிவலப் பாதையை தூய்மையாக பராமரிப்பது குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், கிரிவலப் பாதையில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது எனவும், குடிசைகள் அமைத்து நிரந்தரமாக தங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்