பட்டப்பகலில் காரின் ஜன்னல் கண்ணாடி வழியே சென்று திருடிய நபர்கள்.. திருடிட்டு அசால்ட்டா வரும் நபர்

Update: 2022-09-08 11:55 GMT

ராமநாதபுரத்தில், காரை நிறுத்திவிட்டு தேநீர் குடிக்கச் சென்ற நேரத்தில், காரின் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளைடியத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

பட்டினம் காத்தான் பகுதியை சேர்ந்த பழனி என்பவர், சாலையின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு, தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட இரு இளைஞர்கள், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில், எதனையும் பொருட்படுத்தாமல், காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்