5 ரூபாய் பிளேடால் பயணியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோட்டம்..தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

Update: 2023-04-28 11:42 GMT

பழனி பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன், பணம் கேட்டு மிரட்டிய 2 பேர், கழுத்தை அறுத்து விட்டு தப்பியோட முயற்சித்தபோது, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மதுரையைச் சேர்ந்த அழகுமலை கண்ணன் என்பவர், பழனி கோயிலுக்குச் சென்று விட்டு ஊர் திரும்புவதற்காக பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாசானம், பாண்டியன் ஆகிய இருவரும், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டியதுடன், அவரை கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோட முயற்சி செய்தார். அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பழனி நகர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்