"உலகிற்கே ஒளி விளக்காக திகழும் நாடாளுமன்றம்" -பிரதமர் மோடி பெருமிதம்

எளிமை, பொறுப்பு, நீடித்த வளர்ச்சியை அடைவதில் உலகிற்கே ஒளி விளக்காக இந்திய நாடாளுமன்றம் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-07 13:55 GMT

மாநிலங்களவையில் புதிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, விவசாயி மகனான குடியரசு துணை தலைவர் ராணுவ பள்ளியில் படித்தவர் என்றும், ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். சட்ட விவகாரங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்ற ஜெயகதீப் தன்கர், அனைத்து பொறுப்புகளையும் திறம்பட செயலாற்றி முத்திரை பதித்தவர் என பெருமிதம் தெரிவித்தார். எளிமை, பொறுப்புகளுடன் நீடித்த வளர்ச்சியை அடைவதில், உலகிற்கே ஒளி விளக்காக இந்திய நாடாளுமன்றம் இருப்பதாகவும், மாநிலங்களவை தான் நாட்டின் மிகப்பெரிய பலம் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்