"அய்யோ என்னோட 130 சவரன் நகை போச்சே"... போலீசாரிடம் உடனடி புகார் அளித்த உரிமையாளர் ... இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்...

Update: 2023-02-13 01:51 GMT

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருக்கும் சுமார் 130 சவரன் தங்க நகை கொள்ளை போனதாக புகார் அளித்தார்.

இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார், அந்தப் பகுதியில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சிசிடிவி காட்சிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த விசாரணையில், நகை கொள்ளை போனதற்கான எந்த தடயங்களும் கிடைக்காததால், வீட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்தனர்.

பின்னர், நகை வைக்கப்பட்டிருந்த பீரோவை மீண்டும் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் ரகசிய அறைக்கு உட்புறமாக உள்ளபீரோ பக்கவாட்டிற்கு இடையேயுள்ள இடுக்கில், நகை தவறி விழுந்து கிடப்பது தெரியவந்தது.

வீட்டின் உரிமையாளர் அதனை கவனிக்காமல், போலீசாருக்கு புகார் அளித்தது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்