கொள்ளையடிக்க வந்த வடமாநில இளைஞர்.. கோழி அமுக்குவது போல் அமுக்கிய ஓனர்

Update: 2022-12-03 03:16 GMT

கன்னியாகுமரியில், பழைய கார் விற்பனை ஷோரூமில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில இளைஞரை, அதன் உரிமையாளர் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

தக்கலை அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது கடையின் பூட்டை உடைத்து மர்மநபர் ஒருவர் புகுந்துள்ளார்.

அப்போது, கடையில் சத்தம் வந்ததைக் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த நபர், அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த சுரேஷ், அந்த கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதுதொடர்பான விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த திரேந்தர் சிங் என தெரியவந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்