ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை "மக்கள் வரவேற்றால் தமிழகம் முழுவதும்..." அமைச்சர் சக்கரபாணி

Update: 2022-10-17 15:22 GMT

குடும்ப அட்டைகள் வழங்குவதில் தேக்கமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நடுக்குப்பம் நியாய விலைக் கடையில் கருவிழி சரிபார்ப்பு அடிப்படையில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும்திட்டம் நல்ல வரவேற்பு பெற்றால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்