பழைய வழக்கு ஒன்றில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

Update: 2022-11-22 01:50 GMT

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் வேலூர் சிறையில் இருந்த போது, அவரின் சிறை அறையை ஆய்வு செய்ய சென்ற பெண் காவலரிடம் அவதுறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை, வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் திருச்சி அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்