கரூர் அரசு மருத்துவமனையில் பிளேடால் அறுத்து உயிரை மாய்த்த முதியவர் - மனைவி அசந்த நேரத்தில் விபரீதம்

Update: 2023-04-17 10:03 GMT

ஈரோடு மாவட்டம் வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயான கருப்பண்ணசாமி என்ற முதியவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அவர், கிசிச்சைக்காக கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை அளிக்க துவங்கினர். தீராத வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட அந்த முதியவர் மன உளைச்சல் காரணமாக தன்னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தன் மனைவி மற்றும் சக நோயாளிகள் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்