"நகை,பணம் வேண்டாம்...பொண்ணு மட்டும் தந்தா போதும்" - இளைஞர்கள் நூதன பிரச்சாரம்

Update: 2022-09-14 13:45 GMT

"நகை,பணம் வேண்டாம்...பொண்ணு மட்டும் தந்தா போதும்" - இளைஞர்கள் நூதன பிரச்சாரம்

கன்னியாகுமரியில் வரதட்சணை ஒழிப்பிற்காக பேருந்து நிலையத்தில் நூதன பிரச்சாரம் மேற்கொண்ட இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...

வில்லுக்குறியைச் சேர்ந்தவர்கள் ஜெனிஷும், சுமிஷும் பட்டதாரி இளைஞர்களான இருவரும் தங்கள் நகைச்சுவையான வீடியோக்கள் மூலமாக சமூக வலைதளங்களைக் கவர்ந்து வந்தனர்..

சிரிக்க மட்டுமல்லாது மக்களை சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த இருவரும் வரதட்சணை ஒழிப்பு குறித்து பரபரப்பான வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்...

மாப்பிள்ளை போல் உடையணிந்து கொண்ட"மணப்பெண் தேவை" என்ற தலைப்பில் தங்கள் விவரங்கள், மற்றும் "வரதட்சணை ஒழிப்போம்" என்ற வாசகம் அடங்கிய பலகையைக் கையில் பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்