ஏழுமலையானை வழிபட்டார் ஜான்வி கபூர் - திருமலைக்கு படியேறி நடந்து வந்து வழிபாடு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
திருமலைக்கு படியேறி நடந்து வந்த அவர், விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
பின்னர், ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்தம், பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.