நானும் விஷ சாராயம் குடிச்சேன்... லிஸ்ட்-ல என்னையும் சேத்துக்கோங்க... 10 நாட்களுக்கு பின் மருத்துவமனை வந்த நபர்..!

Update: 2023-05-24 01:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூரில் விஷ சாராயம் குடித்ததாக 10 நாட்களுக்கு பிறகு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி பத்து நாட்கள் கடந்த நிலையில், ஒருவர் தானாக வந்து விஷ சாராயம் குடித்ததாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். விஷசாராயம் குடித்து, சிகிக்சை பெறுபவர்களுக்கு அரசு சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், நானும் ரவுடிதான் என்னையும் கணக்கில சேர்த்துகிங்க என்ற பாணியில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்