கடும் குளிர், காற்றிலும் அசராமல் நின்று எரியும் மகா தீபம் | Maha Deepam

Update: 2022-12-11 03:41 GMT

திருவண்ணாமலையில், பனிமூட்டம் சூழ்ந்து குளிர் காற்று வீசும் நிலையில், மலை உச்சியின் மீது ஏற்றப்பட்ட தீபம் 5ஆம் நாளில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அண்ணாமலையார் கோயில் மலை உச்சியின் மீது கடந்த 6ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து 11 நாட்கள் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, 5ஆம் நாளில் பனிப்பொழிவு உடன் குளிர் காற்று வீசும் நிலையில், இரண்டாயிரத்து 668 உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்