"இதுக்குத்தான்... ஒழுங்கா ரீசார்ஜ் செய்யணும்"...25க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

Update: 2022-12-30 06:41 GMT

திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசு பேருந்து துவாக்குடி சுங்க சாவடியை கடக்க முயன்றது. அப்போது அரசு பேருந்திற்கான பாஸ்ட்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கச்சாவடி அதிகாரிகள் பேருந்தை அங்கேயே நிறுத்தினர்.இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் அவ்வழியே சென்ற வேறு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால் அரசு பேருந்து அங்கேயே 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கும்பகோணம் கோட்டம் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்த பிறகு நடத்துனர் சுங்க கட்டணத்தை செலுத்திய பின் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்