பசுவின் வாயில் வெடிவைத்த கோரம்.. மர்ம நபர்களின் மனிதநேயம் அற்ற செயல்..! கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-12-16 04:49 GMT

கேரள மாநிலம் பாலக்காட்டில் பசுவின் வாயில் பட்டாசு வெடிக்க செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பட்டிக்கரை புறவழி சாலையில் வாயில் காயத்தோடு காணப்பட்ட பசுவை, கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த போலீசார், போலீசார் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில், வாயில் பட்டாசு வைத்து வெடிக்க செய்து காயம் ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்