தாயை கொடூரமாக தாக்கிய தந்தை.. அம்மிக்கல்லில் பதிலடி கொடுத்த மகன் - திருச்சியில் பயங்கரம்

Update: 2023-06-04 02:28 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த தந்தையை, அம்மிக்கல்லால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்த இவர், மதுவுக்கு அடிமையாகி மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதே போல், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், மனைவியை புகழேந்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது மகன் சுரேந்தர், தந்தையை தட்டிக்கேட்கவே இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டிலிருந்து அம்மிக்கல்லால் தந்தையை மகன் அடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்